‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
'லியோ' படத்திற்கு அதிகாலை காட்சி வேண்டுமென நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம். ஆனால், அதற்கு அனுமதி அளிக்க முடியாது என மறுத்தது நீதிமன்றம். இருப்பினும் காலை 7 மணிக்கு காட்சிகளை அனுமதிக்க பரிசீலனை செய்யலாம் என தமிழக அரசை கேட்டுக் கொண்டது. அது பற்றி ஆலோசித்த தமிழக அரசு 7 மணிக்கு காட்சிகளை நடத்த அனுமதிக்க முடியாது, முன்னர் சொன்னபடி 9 மணிக்குதான் ஆரம்பமாகும் என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
தயாரிப்பு நிறுவனம் கேட்ட காட்சி மாற்றத்தை தமிழகத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே காலை 9 மணி காட்சி முதல் டிக்கெட்டுகளை விற்றாகிவிட்டது. இப்போது மாற்றினால் தேவையற்ற குழப்பம் ஏற்படும், அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அவர்களது முடிவுக்குக் கட்டுப்பட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் இப்படி சிறப்புக் காட்சிகள் குறித்து தேவையற்ற சர்ச்சை, பிரச்சனை, விவாதம் ஆகியவை எழாமல் இதற்கு நிரந்தரமாக ஒரு தீர்வை எட்ட வேண்டும் என திரையுலகினர் விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பண்டிகை நாட்களில் எத்தனை மணிக்குக் காட்சிகளை ஆரம்பிப்பது, எத்தனை காட்சிகளை நடத்துவது என தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் ஆலோசித்து ஒரு முடிவை எட்டி, அதை அரசிடம் தெரிவித்து அதன்படி இனி வரும் காலங்களில் நடத்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவிக்கிறார்கள்.
இத்தனை மணிக்குத்தான் முதல் காட்சி ஆரம்பமாகும் என உறுதியாக அறிவித்துவிட்டால் ரசிகர்கள் தரப்பிலிருந்தும் தேவையற்ற சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் எழுப்ப மாட்டார்கள். அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையும் நடக்காது என நினைக்கிறார்கள்.
'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு அரசு சார்பில் சம்பந்தப்பட்டவர்களை திரையுலகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து இது பற்றி நிரந்தரமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.