அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மாஜி ஹீரோயினான அம்பிகா, அஜித் நடித்த உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது அஜித் செய்த ஒரு உதவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛அமர்க்களம் படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற ஒரு தகவலை செய்தித்தாள் மூலம் பார்த்தார் அஜித். உடனடியாக அது குறித்து விசாரித்தவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி, இதை உடனடியாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு கொடுங்கள் என்று உத்தரவு போட்டார்.
இப்படி தன்னிடத்தில் நேரில் வந்து உதவி கேட்க வராமலேயே செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை பார்த்து அது குறித்து விசாரித்து தாமாக தேடிச் சென்று உதவி செய்யக் கூடியவர்தான் அஜித்குமார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது'' என்று கூறியுள்ளார் நடிகை அம்பிகா.