சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் |
மாஜி ஹீரோயினான அம்பிகா, அஜித் நடித்த உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது அஜித் செய்த ஒரு உதவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛அமர்க்களம் படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற ஒரு தகவலை செய்தித்தாள் மூலம் பார்த்தார் அஜித். உடனடியாக அது குறித்து விசாரித்தவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி, இதை உடனடியாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு கொடுங்கள் என்று உத்தரவு போட்டார்.
இப்படி தன்னிடத்தில் நேரில் வந்து உதவி கேட்க வராமலேயே செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை பார்த்து அது குறித்து விசாரித்து தாமாக தேடிச் சென்று உதவி செய்யக் கூடியவர்தான் அஜித்குமார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது'' என்று கூறியுள்ளார் நடிகை அம்பிகா.