அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

சினிமா பின்னணி பாடகியான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பொறுப்பான தாயாக மாறியுள்ளார். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளபதிவில், ‛‛குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபர் எங்கள் காரின் மீது மோதிவிட்டார். காரின் இடது பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த எனது குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோல் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் நபரின் கைகளை உடைக்க வேண்டும் என்றும் கோபமாக பதிவிட்டு, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள்'' என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.