ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, ‛என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
திடீரென மகள் இறந்ததால் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புது இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.