Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதிஹாசனை தொடரும் மர்ம நபர் : பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள முடிவு?

23 செப், 2023 - 01:50 IST
எழுத்தின் அளவு:
Mystery-man-followed-Shruti-Haasan:-Decision-to-retain-bodyguards?

துபாய் சென்றிருந்த ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை திரும்பினார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்ருதியுடன் நெருக்கமாக நடந்து வரவும், அவருடன் பேசவும் முயற்சி செய்தார். நீங்கள் யார் என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள், உங்களை எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு வேகமாக அவரிடமிருந்து நகர்ந்து ஓடிவந்த ஸ்ருதிஹாசன், அங்கு நின்றிருந்த புகைப்படக்காரர்களை பார்த்து, 'என்னை பின்தொடர்ந்து வரும் அந்த நபர் யார்?” என்று கேட்டார். அதற்கு புகைப்படக்காரர்கள், 'அந்த நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை' என்றனர்.

இது தொடர்பான வீடியோவை புகைப்படக்காரர் பயானி வெளியிட்டுள்ளார். அதில், 'ஸ்ருதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்ததும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் பேச முயல்கிறார். ஸ்ருதி அவரை புறக்கணித்து சென்றாலும் பின்தொடர்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது “என்னை பின்தொடர்ந்து வந்த நபர் யார் என்று தெரியாது. விமான நிலையத்தில் நடந்து சென்றபோது அவர் என் பின்னால் வருவதை கவனித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமாக அவர் வந்ததால் அசவுகரியமாக இருந்தது. இதனால் வேகமாக நடந்து வெளியே வந்தேன். காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார். நான் பயந்து போனேன்.

நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே நழுவி சென்று விட்டார். எனக்கு சொந்தமாக பவுன்சர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். அதனால்தான் இப்போது வரை பாதுகாப்புக்கு பாடிகார்டுகள் இல்லாமல் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு பாடிகார்டு வைத்துக்கொள்ள வேண்டுமோ? என யோசிக்கிறேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுவேன்: விஷால்தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுவேன்: ... திடீரென இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன 'பாய்காட் லியோ' ஹேஷ்டேக் ;  காரணம் இதுதான் திடீரென இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in