பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? |

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் தெலுங்கு, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்குகிறார்.
இந்த படத்தில் செல்வராகவனுடன் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தி, சுனில் ஆகியோரும், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர யோகி பாபு, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும்” என்றார்.