என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உட்பட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவரும் நடிகை கீர்த்தி பாண்டியனும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க தொடங்கிய போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், அன்பிற்கினியாள், கொஞ்சி பேசினாள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான போது சிலர் அவர்களின் ஜோடியை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனுடன் தான் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்' என்று பதிவிட்டு, விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.