இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமா உலகில் சில அடிப்படை விஷயங்களைக் கூட பல பிரபலங்கள் செய்வதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக 'என் உயிர் தோழன்' பாபு மறைவு இருந்தது. ஆறுதல் சொல்வதற்கும், இரங்கல் சொல்வதற்கும் கூட இங்கு பிரபலமாக இருக்க வேண்டும்.
சுமார் 30 வருட காலமாக படுத்த படுக்கையாக தனது வாழ்க்கையை கொடுமையுடன் நகர்த்தி வந்த பாபு நேற்று முன்தினம் மறைந்து போனார். அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சினிமா உலகினருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, வசனகர்த்தா, நடிகராக இருந்தவர்.
அவருடைய மறைவுச் செய்தி வந்ததும் தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் பாரதிராஜாவைத் தவிர வேறு யாருமே தெரிவிக்கவில்லை. பாபுவுடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது மூத்த இயக்குனர்கள், நடிகர்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை.
பாரதிராஜா மட்டுமே பாபுவின் வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களிலாவது யாராவது சொல்லியிருப்பார்கள் எனத் தேடிப் பார்த்தால் அங்கும் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு மட்டுமே பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த சிறுமியின் அதிர்ச்சிகரமான மறைவை நேரலை செய்த ஊடகங்கள் கூட, பாபு மரணத்தைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.