மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
'ஒரு கைதியின் டயரி' என்கிற பரபர ஆக்ஷன் படத்திற்கு பிறகு அழகான காதல் கதை ஒன்றை படமாக்க விரும்பினார் பாரதிராஜா. இதற்காக அவர் 'பச்சைக்கொடி' என்ற தலைப்பு வைத்து ஒரு கதையும் தயாராக வைத்திருந்தார். அப்போது அவர் கையில் 'முதல் மரியாதை' ஸ்கிரிப்டும் ரெடியாக இருந்தது. ஆனால் சிவாஜி கால்ஷீட் கிடைக்காததால் 'பச்சைக்கொடி'யை ஆரம்பித்தார்.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தினார். நடிகராக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். நாயகியாக அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனியை தேர்வு செய்திருந்தார்.
படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். படத்திற்காக 'பூஜைகேத்த பூவிது' பாடலையும் ரஞ்சனியை வைத்து படமாக்கினார்.
இதற்கிடையில் முதல் மரியாதை படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக் கொண்டதும் 'பச்சைக்கொடி'யை அப்படியே விட்டு விட்டு அந்த படத்தை இயக்க தொடங்கி விட்டார். பச்சைக்கொடிக்காக தேர்வான ரஞ்சனியை 'முதல் மரியாதை' படத்தில் நடிக்க வைத்தார். 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 'பச்சைக்கொடி' கதையை பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்கினார். பாண்டியராஜன், நிரோஷா, ஜனகராஜ், நடித்தனர்.