ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மேலாளராக இருந்தவர் பாலமுருகன். இவர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி 40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தற்போதைய மேலாளர் தர்மராஜ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் என்பவரின் தூண்டுதலின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சங்கர்பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து 'எவர்கிரீன் மீடியா' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிறுவனம் நடிகர் சங்கத்தின் ஒரு நிறுவனம் என்று சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகளை பெற்று, அதன் மூலம் பல நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியாக ஏமாற்றி வந்துள்ளனர். அந்தவகையில் சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடி செய்து வரும் பாலமுருகன், சங்கர் பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.