தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மேலாளராக இருந்தவர் பாலமுருகன். இவர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி 40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தற்போதைய மேலாளர் தர்மராஜ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் என்பவரின் தூண்டுதலின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சங்கர்பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து 'எவர்கிரீன் மீடியா' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிறுவனம் நடிகர் சங்கத்தின் ஒரு நிறுவனம் என்று சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகளை பெற்று, அதன் மூலம் பல நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியாக ஏமாற்றி வந்துள்ளனர். அந்தவகையில் சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடி செய்து வரும் பாலமுருகன், சங்கர் பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.