பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
மலையாளத்தில் முன்னணி நடிகராக நடித்து வரும் துல்கர் சல்மான் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமாகிவிட்டார். அதனால் மிகப்பெரிய நிறுவனங்கள் அவரை தங்களது விளம்பர மாடலாகவும் தூதுவராகவும் நியமிக்க விருப்பம் காட்டி வருகின்றன. ஒருவேளை அவர் சினிமாவிற்கு வராவிட்டால் மிகப்பெரிய கார் விரும்பியாக மாறி இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு தனது தந்தை மம்முட்டியைப் போலவே விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் மிக்கவர் துல்கர் சல்மான். குறிப்பாக கடந்த 2017ல் போர்சே பனமேரா டர்போ கார் ஒன்றை வாங்கினார். அப்போது முதல் அவருக்கு போர்சே கார்கள் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டு விட்டது.
தற்போதும் புதிய மாடல் போர்சே கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார் என்றே தெரிகிறது. அவரை பெருமைப்படுத்தும் விதமாக போர்சே கார் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக வெளியிடும் கிறிஸ்டோபோரஸ் என்கிற மாதாந்திர இதழில் தற்போது துல்கர் சல்மானின் புகைப்படத்தை அட்டைப்படமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் 408வது இதழ் இது. இத்தனை வருடங்களில் முதன்முறையாக இந்த இதழில் இடம்பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை துல்கர் சல்மான் பெற்றுள்ளார் என்பது தான் இதில் ஹைலைட் டே.