விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
மலையாளத்தில் முன்னணி நடிகராக நடித்து வரும் துல்கர் சல்மான் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமாகிவிட்டார். அதனால் மிகப்பெரிய நிறுவனங்கள் அவரை தங்களது விளம்பர மாடலாகவும் தூதுவராகவும் நியமிக்க விருப்பம் காட்டி வருகின்றன. ஒருவேளை அவர் சினிமாவிற்கு வராவிட்டால் மிகப்பெரிய கார் விரும்பியாக மாறி இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு தனது தந்தை மம்முட்டியைப் போலவே விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் மிக்கவர் துல்கர் சல்மான். குறிப்பாக கடந்த 2017ல் போர்சே பனமேரா டர்போ கார் ஒன்றை வாங்கினார். அப்போது முதல் அவருக்கு போர்சே கார்கள் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டு விட்டது.
தற்போதும் புதிய மாடல் போர்சே கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார் என்றே தெரிகிறது. அவரை பெருமைப்படுத்தும் விதமாக போர்சே கார் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக வெளியிடும் கிறிஸ்டோபோரஸ் என்கிற மாதாந்திர இதழில் தற்போது துல்கர் சல்மானின் புகைப்படத்தை அட்டைப்படமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் 408வது இதழ் இது. இத்தனை வருடங்களில் முதன்முறையாக இந்த இதழில் இடம்பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை துல்கர் சல்மான் பெற்றுள்ளார் என்பது தான் இதில் ஹைலைட் டே.