20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரடி, மணிகண்டன் ஆச்சாரி, ராஜீவ் பிள்ளை உள்பட பலர் நடிக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார்.
படத்தின் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இக்குனர் லியோ ஜோசின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டார்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.