பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரடி, மணிகண்டன் ஆச்சாரி, ராஜீவ் பிள்ளை உள்பட பலர் நடிக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார்.
படத்தின் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இக்குனர் லியோ ஜோசின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டார்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.




