'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலியுடன் ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவான ராம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பாதிப்படம் முடிவடைவதற்குள் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படம் தற்போது வரை மீண்டும் துவங்கப்படாமலேயே இருக்கிறது.
தற்போது மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸுடன் இணைந்து ‛ஐடென்டிட்டி' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சைக்கோ திரில்லர் படமாக வெளியான 'பாரன்ஷிக்' படத்தை இயக்கிய அகில்பால் - அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் தான் இந்தப் படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் டொவினோ தாமஸ், திரிஷா இருவரும் இல்லாமலேயே மந்த்ரா பேடி நடிக்கும் காட்சிகளை முதலில் படமாக்க துவங்கி விட்டனர் ஐடென்டிட்டி இயக்குனர்கள். மொத்தம் ஏழு கட்ட படப்பிடிப்பாக 120 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனிவரும் அடுத்தகட்ட படப்பிடிப்புகளில் திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.