தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்வேதா பண்டேகர், சந்திரலேகா தொடரில் நடித்திருந்தார். சீரியல் முடிந்த கையோடு சக நடிகரான மால்மருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான ஸ்வேதாவுக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அதிலும் ஒரு குழந்தை ஆண் மற்றொரு குழந்தை பெண் என கலப்பு இரட்டையர்களாக பிறந்துள்ளனர். குழந்தைகளின் கைகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்வேதா தன் குழந்தைகளை நிலவு என வர்ணித்து அழகான கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். இரட்டை நிலவுக்கு தாயான ஸ்வேதாவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.