Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுதமியின் 25 கோடி சொத்து அபகரிப்பு : போலீசில் புகார்

12 செப், 2023 - 01:36 IST
எழுத்தின் அளவு:
Gautamis-25-crores-property-embezzlement:-Complaint-to-the-police

தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவுதமி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கவுதமி பின்னர் அதிலிருந்து மீண்டு, தற்போது தொலைக்காட்சி தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார் கவுதமி. அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமா தொழிலில் 17 வயது முதல் சம்பாதித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு 25 கோடி ஆகும்.

எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத் தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்த நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷா நடிக்கும் வெப் தொடர்த்ரிஷா நடிக்கும் வெப் தொடர் 50 படத்தில் பெற்றது ஞானமும், அனுபவமும்: விஜய்சேதுபதி 50 படத்தில் பெற்றது ஞானமும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in