கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு |
டைரக்டர் அமீர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஆதிபகவன். பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்ட இப்படம் வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்து விட்டது. இருப்பினும் சில தியேட்டர்களில் அவர்களாக ஓட்டி வருகிறார்கள். இந்தநேரத்தில், அப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய ராஜசேகர் என்பவர் அப்பட இயக்குனரான அமீர் மீது ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதாவது, ஆதிபகவன் படத்தில் நான்தான் பைட் மாஸ்டராக பணியாற்றினேன். பல சண்டை காட்சிகளை ரிஸ்க் எடுத்த செய்திருந்தேன். ஆனால் படம் திரைக்கு வரும்போது பார்த்தால், டைட்டீலில் என் பெயர் இல்லை. மாறாக, ஆக்சன் டிசைனர் என்று தனது பெயரை போட்டுக்கொண்டார் அமீர்.
அஜீத் நாயகனாக நடித்த உன்னைத்தேடி படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகமானவன் நான். அதையடுத்து தமிழ் தெலுங்கு என்று இதுவரை 200 படங்களில் பணியாற்றி விட்டேன். தமிழில் விஜய், அஜீத், சூர்யா என்று முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியிருப்பது போன்று தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இதுவரை யாருமே நான் பணியாற்றிய படஙகளில் எனது பெயரை நீக்கியதில்லை. ஆனால் ஆதிபகவன் படத்தில்தான் முதன்முறையாக என் பெயரை நீக்கி இருட்டடிப்பு செய்த சம்பவம் நடந்துள்ளது என்று ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
பெப்ஸி அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதன் தலைவர்தான் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பார். ஆனால் இப்போது பெப்ஸியில் தலைவராக இருக்கும் அமீரே பிரச்சினைக்கு காரணமாகியிருக்கிறார். அதனால் இந்த விவகாரத்தை சீனியர்கள் அணுகி பேசி தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.