நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ஆக்ஷன் படமான கிறிஸ்டோபர் மற்றும் ஆர்ட் படமான நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
ஆதிபுருஷ் படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை பிடித்துப்போனதால் மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.