நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ஆக்ஷன் படமான கிறிஸ்டோபர் மற்றும் ஆர்ட் படமான நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
ஆதிபுருஷ் படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை பிடித்துப்போனதால் மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.