சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு |
மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் லூசிபர் மூலம் பெற்றார். இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து புரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
அதே சமயம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என கடந்த இரண்டு வருடங்களாகவே அவர் கூறி வந்தாலும் அவரும் மோகன்லாலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை எப்போது துவங்குவது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரித்விராஜ் இன்னும் வெளியிடவில்லை.
இந்தநிலையில் இந்த படம் விரைவில் துவங்க இருக்கிறது என்றும் அதற்கு முன்னதாக புரோமோ ஷூட் ஒன்றை பிரித்விராஜ் நடத்தப் போகிறார் என்றும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.
“யார் இப்படி ஒரு செய்தியை பரப்பினார்கள் என தெரியவில்லை. லூசிபர் 2 படத்திற்கு புரோமோ ஷூட் பண்ணும் எண்ணமே இல்லை. அதே சமயம் இந்த படத்தை எப்போது துவங்கப் போகிறோம் என்பது குறித்த இன்னும் சில விஷயங்களையும் இந்த மாதமே அறிவிக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.