மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
60வது தேசிய விருது பட்டியலில் தனது பரதேசி படம் பெரும் பங்கு பெறும் என்பதுதான் பாலாவின் பலத்த எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது. அதனால் தேசிய விருது அறிவிக்கப்போகிறார்கள் என்றதும் தனது படத்துக்கு கிட்டத்தட்ட பத்து விருதுகளாவது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியிருந்திருக்கிறார். ஆனால், சிறந்த பிராந்திய மொழிப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தை அறிவித்தவர்கள், விஸ்வரூபம் படத்துக்கு நடனம், தயாரிப்பு வடிவமைப்புக்கு தேசிய விருத அறிவித்தனர். பரதேசிக்கு சிறந்த உடை அலங்காரம் என்ற பிரிவில் மட்டுமே விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்த்த பாலா மற்றும் பரதேசி படக்குழுவே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. அந்த அதிர்ச்சி செய்தியைக்கேட்டு, அதர்வாவும், பாலாவும் கட்டிபிடித்து அழுதார்களாம்.
இந்த அளவுக்கு அவர்கள் பீல் பண்ண என்னதான் காரணம்? என்று விசாரித்தபோது, தான் இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிய ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினாராம் பாலா. அதோடு. இந்த படத்தில் இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என்று பல பிரிவுகளில் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வந்ததாம். ஆனால் ஆறுதல் பரிசு போல் உடை அலங்காரததுக்கு மட்டும் கிடைத்ததால் வெறுத்து விட்டாராம். முக்கியமாக ஒளிப்பதிவாளர் செழியனுக்கு கிடைக்காதது அவரை பேரதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறதாம்.