கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? |

சமீபத்தில் 69வது இந்திய திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இத்தனை வருடங்களில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்கிற பெருமையும் இதனுடன் சேர்ந்துள்ளது.
பொதுவாகவே கலைப் படைப்பில் நடித்த நடிகர்களுக்குத் தான் பெரும்பாலும் தேசிய விருது வழங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் புஷ்பா என்கிற கமர்ஷியல் படத்தில் புஷ்பராஜ் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பு அதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “புஷ்பராஜூக்கு (அல்லு அர்ஜுன்) தேசிய விருது மட்டுமல்ல, எல்லா விருதுகளும் நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் முதலில் வருத்தப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்” என்று உற்சாகமாக பேசி இருந்தார். அவர் சொன்னபடி தற்போது அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டது. இதனால் தற்போது ராஷ்மிகா பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




