நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
சமீபத்தில் 69வது இந்திய திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இத்தனை வருடங்களில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்கிற பெருமையும் இதனுடன் சேர்ந்துள்ளது.
பொதுவாகவே கலைப் படைப்பில் நடித்த நடிகர்களுக்குத் தான் பெரும்பாலும் தேசிய விருது வழங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் புஷ்பா என்கிற கமர்ஷியல் படத்தில் புஷ்பராஜ் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பு அதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “புஷ்பராஜூக்கு (அல்லு அர்ஜுன்) தேசிய விருது மட்டுமல்ல, எல்லா விருதுகளும் நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் முதலில் வருத்தப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்” என்று உற்சாகமாக பேசி இருந்தார். அவர் சொன்னபடி தற்போது அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டது. இதனால் தற்போது ராஷ்மிகா பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.