நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தனர். தற்போது 5வது முறையாக தனுஷ், பிரகாஷ் ராஜ் கூட்டணி இணைவதை ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.