சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தனர். தற்போது 5வது முறையாக தனுஷ், பிரகாஷ் ராஜ் கூட்டணி இணைவதை ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.