மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் முனி, சக்கரகட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் வேதிகா. ஆனால் அவர் பெயர் பரிட்சயமான அளவுக்கு அவரது நடிப்பு இதுவரை பேசப்படவில்லை. ஆனால் பரதேசி படத்தில் அவர் உடம்பு முழுக்க கருப்பு வண்ணத்தை பூசி பக்காவாக மாற்றியிருந்தார் பாலா. அதோடு, சில காட்சிகளில் நடிக்கவும் வைத்திருந்தார். அதனால் இதுவரை வேதிகாவை ஒரு கதாநாயகியாகவே கருதாத இயக்குனர்கள்கூட இப்போது அவரது நடிப்பைப்பார்த்து விட்டு எக்கச்சக்கமாக பாராட்டுகிறார்களாம். ஏற்கனவே பாலாவின் படத்தில நடிப்பதே விருது கிடைத்ததற்கு சமம் என்று கூறி வந்த வேதிகா, இயக்குனர்களே தனது நடிப்பை ஏகமனதோடு புகழ்ந்து தள்ளுவதால் பாலாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் தனக்கான புதிய கதவுகள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
அவரிடத்தில், பரதேசிக்கு பிறகு தமிழில் உங்களது பிரவேசம் எப்படியிருக்கும் என்று கேட்டால், படத்துக்குப்படம் எனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டுதான் வந்தேன். அப்படி நான் வந்ததினால்தான் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு சான்ஸ் கொடுத்தார் பாலா சார். அவரே அழைத்தபோதுதான் எனக்குள்ளும் ஒரு நல்ல நடிகை இருப்பதை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அந்த அடையாளத்தை இப்போது மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது பரதேசி. அதனால் தொடர்ந்து இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று முடிவு செய்யவில்லை. ஆனால் இனிமேல் டம்மியான வேடங்களை தவிர்த்து எனக்கும் நடிப்பதற்கு ஓரளவு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பேன் என்று சொல்லும் வேதிகா, தான் கிளாமராக நடிக்க மறுப்பதாக சமீபத்தில் வெளியான சில செய்திகளை மறுக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதன்படி நடிப்பதற்கு எப்போதும் போல் தயாராக இருக்கிறேன் என்கிறார்.