பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாவதால் நாகசைதன்யாவும், இயக்குனரும் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களோடு பழகி தங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நாயகிக்கும், நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவ பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.