கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! | ‛லப்பர் பந்து' வெளியான அதே நாளில் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ! | அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது' | இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் | பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் வரிசையில் 'மிராய்' நாயகன் தேஜா சஜ்ஜா | டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? |
நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாவதால் நாகசைதன்யாவும், இயக்குனரும் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களோடு பழகி தங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நாயகிக்கும், நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவ பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.