படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ‛லாபம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்திலும், 'ஹாய் நானா' என்ற புதிய படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சுருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றிய கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில், ‛பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, குதிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். நாம் நமது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும். அந்த விளையாட்டை மட்டும் பாருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சுருதிஹாசனின் இந்த கருத்து ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் யாரை குறிப்பிடுகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.