புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். ‛‛தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில்'' என கவனிக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான, நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லியதை அடுத்து வரும் செப்., 13ல் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அதன்பின் அன்பிற்கினியாள் படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.




