இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு |

தமிழில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களாக இவர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இனி அந்தபடம் துவங்க சாத்தியமில்லை என சேரன் கூறினார்.
இந்நிலையில் லிவ் ஒடிடி தளத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் சேரன். இதனை நடிகர் சரத்குமார் வழங்குகிறார். இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை 6 எபிசோடுகள் ஆக உருவாக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு ' ஜர்னி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.




