பிளாஷ்பேக் : மனோரமாவை ஹீரோயினாக்கிவிட்டு மறைந்த டி.ஆர்.சுந்தரம் | தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் ரெய்டு: இவர் யார் தெரியுமா...? | தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு |
பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன்.. பியார் பிரேமா காதல், வர்மா, எப்.ஐ.ஆர், ஆகிய படங்களில் நடித்த ரைசா கடைசியாக காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் உள்ள ஒரு பூனை தன்னை கடித்து விட்டது என்று கூறிய ரைசா அதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். தெருவில் இருந்த பூனையை தூக்கி ஆசையுடன் கொஞ்ச முயற்சித்தபோது அது அவரை கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரைசா கூறும்போது, தெருவில் இருக்கும் பூனைகள் நமது வீட்டில் இருப்பதை போல அல்ல என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் ரைசா தனது வீட்டிலேயே இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.