பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன்.. பியார் பிரேமா காதல், வர்மா, எப்.ஐ.ஆர், ஆகிய படங்களில் நடித்த ரைசா கடைசியாக காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் உள்ள ஒரு பூனை தன்னை கடித்து விட்டது என்று கூறிய ரைசா அதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். தெருவில் இருந்த பூனையை தூக்கி ஆசையுடன் கொஞ்ச முயற்சித்தபோது அது அவரை கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரைசா கூறும்போது, தெருவில் இருக்கும் பூனைகள் நமது வீட்டில் இருப்பதை போல அல்ல என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் ரைசா தனது வீட்டிலேயே இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.