வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன்.. பியார் பிரேமா காதல், வர்மா, எப்.ஐ.ஆர், ஆகிய படங்களில் நடித்த ரைசா கடைசியாக காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் உள்ள ஒரு பூனை தன்னை கடித்து விட்டது என்று கூறிய ரைசா அதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். தெருவில் இருந்த பூனையை தூக்கி ஆசையுடன் கொஞ்ச முயற்சித்தபோது அது அவரை கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரைசா கூறும்போது, தெருவில் இருக்கும் பூனைகள் நமது வீட்டில் இருப்பதை போல அல்ல என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் ரைசா தனது வீட்டிலேயே இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




