நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை மற்றும் தமிழ், தெலுங்கில் உருவான கஸ்டடி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் இந்த மூன்று படங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் பார்ட்டி. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திர பட்டாளம் இடம் பெற்றுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ளார். தனது படங்களை சிரமப்பட்டாவது ரிலீஸ் செய்து விடும் தயாரிப்பாளர் டி.சிவா பார்ட்டி படத்தின் ரிலீஸ் இவ்வளவு தாமதமாவது ஏன் என்பது குறித்த தகவலை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பிஜி தீவில் தான் படமாக்கப்பட்டன. அதற்கு காரணம் படத்தின் கதை ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் பிஜி தீவில் படப்பிடிப்பை நடத்தினால் அங்கே செலுத்தும் கட்டணத்தில் 47 சதவீதம் நமக்கு திருப்பி தரப்படும் என ஒரு சலுகை அப்போது இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலை மாறி சுற்றுலா பாதிக்கப்பட்டு இது போன்று சலுகைத்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. இது போன்ற பல படங்கள் இந்த சலுகைக்காக நிலுவையில் இருக்கின்றன.
தற்போது அங்கு அரசாங்கம் மாறியுள்ள நிலையில் இது போன்ற சலுகை தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ரிலீஸ் செய்து விட்டால் இந்த தொகையை பெற முடியாமல் போய்விடும். அந்த அளவிற்கு இது மிகப்பெரிய தொகையும் கூட. அதனால் அந்த தொகையை பெற்ற பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மாதத்திற்குள் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறியுள்ளார்.