வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக 100வது படத்தை எட்டியுள்ளார். அதேபோல், நடிகர் ஆக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் சொந்தமாக தயாரிக்கிறார்.
இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த ' மதயானைக்கூட்டம்' படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்திருந்தார் அதன் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து ஜி.வி. பிரகாஷ் பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷின் 25வது படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனை மூன்று பாகங்களாக உருவாக்க தற்போதே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.