நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மீசையை முறுக்கு நடிகர் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு நேற்று அடுத்து என பதிவிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் இது அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்க உள்ள 68வது படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வெளியிட்டது ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை பற்றி தான். வெங்கட்பிரபு கிப்ட் என குறிப்பிட்டு இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியிட்டார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக தெரிகிறது. மேலும், கிடப்பில் இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு தனது ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.