கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
மீசையை முறுக்கு நடிகர் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு நேற்று அடுத்து என பதிவிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் இது அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்க உள்ள 68வது படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வெளியிட்டது ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை பற்றி தான். வெங்கட்பிரபு கிப்ட் என குறிப்பிட்டு இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியிட்டார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக தெரிகிறது. மேலும், கிடப்பில் இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு தனது ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.