ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் |
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' படம் கடந்த வாரம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. ஓப்பன்ஹெய்மர் சமஸ்கிருத மொழியை விரும்பி படித்தார், குறிப்பாக பகவத் கீதை அவருக்கு பிடித்த ஒன்றாக இருந்தது என்று அவரது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இதனை வில்லங்கமாக காட்சிபடுத்தியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். ஓப்பன்ஹெய்மரும், அவரது தோழியும் பாலுறவு கொள்ளும்போது பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்கள் பற்றி விவாவதிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று இந்திய தணிக்கை குழுவிற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று, சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும், இக்காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.