அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' படம் கடந்த வாரம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. ஓப்பன்ஹெய்மர் சமஸ்கிருத மொழியை விரும்பி படித்தார், குறிப்பாக பகவத் கீதை அவருக்கு பிடித்த ஒன்றாக இருந்தது என்று அவரது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இதனை வில்லங்கமாக காட்சிபடுத்தியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். ஓப்பன்ஹெய்மரும், அவரது தோழியும் பாலுறவு கொள்ளும்போது பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்கள் பற்றி விவாவதிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று இந்திய தணிக்கை குழுவிற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று, சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும், இக்காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.