பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ‛மார்க் ஆண்டனி'. இதில் சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதை போக்கை கூறும் விதத்தில் குரல் ஒன்றை கொடுப்பதற்காக நடிகர் கார்த்தியை அணுகியுள்ளனர். அவரும் விஷால் தனது நண்பர் முறையில் மார்க் ஆண்டனி படத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முன்னணி நடிகர்களே குரல் கொடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் கமல் குரல் கொடுத்தார். மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்தார். இப்போது மார்க் ஆண்டனியின் கார்த்தி குரல் கொடுக்கிறார்.