நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ‛மார்க் ஆண்டனி'. இதில் சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதை போக்கை கூறும் விதத்தில் குரல் ஒன்றை கொடுப்பதற்காக நடிகர் கார்த்தியை அணுகியுள்ளனர். அவரும் விஷால் தனது நண்பர் முறையில் மார்க் ஆண்டனி படத்திற்கு குரல் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முன்னணி நடிகர்களே குரல் கொடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் கமல் குரல் கொடுத்தார். மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்தார். இப்போது மார்க் ஆண்டனியின் கார்த்தி குரல் கொடுக்கிறார்.