'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழகத்தில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வருகிறவர்கள் பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவான ஆவண குறும்படம் ‛எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. யானைகுட்டிகளை இந்த தம்பதியர் எப்படி அன்பாக பராமரித்து வளர்த்தனர் என்று அந்த குறும்படத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற பின் இந்த தம்பதியர் இந்தியா முழுக்க பிரபலமாகினர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டி, கவுரவித்தனர். இப்போது நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவர்களை அழைத்து பாராட்டி உள்ளார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பொம்மன், பெல்லி தம்பதியரை அழைத்து, யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.