ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழகத்தில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வருகிறவர்கள் பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவான ஆவண குறும்படம் ‛எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. யானைகுட்டிகளை இந்த தம்பதியர் எப்படி அன்பாக பராமரித்து வளர்த்தனர் என்று அந்த குறும்படத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற பின் இந்த தம்பதியர் இந்தியா முழுக்க பிரபலமாகினர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டி, கவுரவித்தனர். இப்போது நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவர்களை அழைத்து பாராட்டி உள்ளார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பொம்மன், பெல்லி தம்பதியரை அழைத்து, யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.