கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஷாலின் 34வது படமாக உருவாக உள்ள இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்துள்ளனர். தற்போது படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
விஷால், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இயக்க உள்ளார் ஹரி. படத்திற்காக வெளியான போஸ்டரிலேயே இயக்குனர் ஹரி தன்னுடைய டிரேட் மார்க்கானை அரிவாளையும் டிசைனில் வைத்துள்ளார்.
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய 'யானை' படம் கடந்தாண்டு வெளிவந்தது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 34வது படத்தை ஆரம்பித்துள்ளார். யானை படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து, தமிழகத்தின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு படமாக்கப்படவுள்ளது.