டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்து வந்த சந்தியா மற்றும் ப்ரிட்டோ மனோ இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு இருவருமே விலகிவிட்டனர். இதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணமானது இந்து, கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சந்தியா - ப்ரிட்டோ மனோவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.