அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
சாமியார் நித்தியானந்தா மீது பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். நித்யானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ரஞ்சிதா.
இதற்கிடையே கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்தியானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார்.
இந்த நிலையில் கைலாசா நாட்டின் ‛லிங்க்டு இன்' இணையதள பக்கத்தில் ரஞ்சிதாவின் பெயர் ‛நித்யானந்த மாயி சுவாமி' என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் எல்லாம் ஓவராக இருக்கும் நிலையில், அந்த நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்பட்டு விட்டனர்.