நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் தனுஷ் கடந்த வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்தார்.
இதையடுத்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா,சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள். ஆனால், இது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே சென்னையில் உள்ள இ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை(ஜூலை 5) புதன்கிழமை பூஜையுடன் துவங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது .