தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சமூக ஆர்வலர்களிடம் மற்றும் அரசியல் பிரமுகரிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
லியோ படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமை, கர்நாடக மற்றும் கேரளா தியேட்டர் உரிமை வியாபாரம் ஆனதை தொடர்ந்து இப்போது தமிழ்நாடு தியேட்டர் உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் முன்னிலையில் உள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். இவர்கள் தான் விஜய்யின் அடுத்து படத்தை தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லியோ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.100 கோடிக்கு விலை சொல்வதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதை விட ரூ.20 கோடி அளவிற்கு குறைத்து கேட்கிறார்களாம். இதனால் தமிழக வியாபாரத்தில் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை எல்லாவற்றையும் மீறி ரூ.100 கோடிக்கு மேல் படம் வியாபாரம் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்ற பெருமை லியோவை சாரும் என்கிறார்கள்.