வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா |

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தொடர் வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு வித்தியாசம் நடனமாடி சிறு குழந்தைகள் வரை ரசிகைகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் தான் இணைந்து நடித்து வரும் அனிமல் என்கிற படத்தின் படப்பிடிப்பை ராஷ்மிகா நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.