20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தொடர் வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு வித்தியாசம் நடனமாடி சிறு குழந்தைகள் வரை ரசிகைகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் தான் இணைந்து நடித்து வரும் அனிமல் என்கிற படத்தின் படப்பிடிப்பை ராஷ்மிகா நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.