அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் |
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தொடர் வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு வித்தியாசம் நடனமாடி சிறு குழந்தைகள் வரை ரசிகைகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் தான் இணைந்து நடித்து வரும் அனிமல் என்கிற படத்தின் படப்பிடிப்பை ராஷ்மிகா நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.