பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சினிமா துறையில் உலகின் தலை சிறந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு படங்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த விருது இப்போது இந்திய படங்களுக்கும் மெல்ல சாத்தியமாகி வருகிறது. கடந்தாண்டு ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகஆஸ்கர் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. அதேப்போன்று ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அதேபோல் இந்த வருடத்திற்கு புதிய உறுப்பினர்களின் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 2023ம் ஆண்டிற்கான 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், சந்திரபோஸ் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.