சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தெலுங்கு திரையுலகில், போதை பொருள் பயன்பாடு குறித்து 2017ம் ஆண்டு கலால் துறை விசாரித்தது. இதில் நடிகர் ரவி தேஜா, நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், புரி ஜெகநாத் உட்பட பல திரை பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவரிடம் 90 பாக்கெட் 'கொக்கைன்' பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகைகள் சுரேகா வாணி, அஷூ ரெட்டி உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அஷூ ரெட்டி அடிக்கடி அவருக்கு போன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை மறுத்துள்ள அஷூ ரெட்டி, ‛என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டிக்கிறேன். உண்மை நிலையை விரைவில் விளக்குவேன். பொதுவெளியில் தனது தொலைபேசி எண்ணை வெளியிட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.