குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தெலுங்கு திரையுலகில், போதை பொருள் பயன்பாடு குறித்து 2017ம் ஆண்டு கலால் துறை விசாரித்தது. இதில் நடிகர் ரவி தேஜா, நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், புரி ஜெகநாத் உட்பட பல திரை பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவரிடம் 90 பாக்கெட் 'கொக்கைன்' பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகைகள் சுரேகா வாணி, அஷூ ரெட்டி உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அஷூ ரெட்டி அடிக்கடி அவருக்கு போன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை மறுத்துள்ள அஷூ ரெட்டி, ‛என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டிக்கிறேன். உண்மை நிலையை விரைவில் விளக்குவேன். பொதுவெளியில் தனது தொலைபேசி எண்ணை வெளியிட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.