'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
மலையாளத்தில் வெளிவந்த 'மணிசித்ரதாழ்' படம், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'சந்திரமுகி'யாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்பிய பி.வாசு அதில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க முயற்சித்தார், அவர் மறுத்து விட்டார். ஜோதிகாவும் நடிக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா நடிக்க வேண்டிய கேரக்டரில் கங்கனா ரணாவத்தும் நடிக்க, தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த வடிவேலு நடித்திருக்கிறார். ராதிகா புதிதாக இணைந்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், “சந்திரமுகி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.