இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் வெளிவந்த 'மணிசித்ரதாழ்' படம், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'சந்திரமுகி'யாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்பிய பி.வாசு அதில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க முயற்சித்தார், அவர் மறுத்து விட்டார். ஜோதிகாவும் நடிக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா நடிக்க வேண்டிய கேரக்டரில் கங்கனா ரணாவத்தும் நடிக்க, தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த வடிவேலு நடித்திருக்கிறார். ராதிகா புதிதாக இணைந்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், “சந்திரமுகி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.