ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்களும் காரணமாகிறது என்று தெரிவித்தேன். இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை .மேலும், அவரது குழுவில் இருந்த முக்கிய நபர் ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். இதெல்லாம் விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்க மாட்டார். அவரது தூண்டுதலின் பெயரில் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தது. விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.