காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்களும் காரணமாகிறது என்று தெரிவித்தேன். இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை .மேலும், அவரது குழுவில் இருந்த முக்கிய நபர் ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். இதெல்லாம் விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்க மாட்டார். அவரது தூண்டுதலின் பெயரில் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தது. விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.