ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்திய வெர்சனில் சமந்தாவும், வருண் தவானும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு செர்பிய நாட்டில் நடந்து வருகிறது. தற்போது செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்த படங்களை வெளியிட்டுள்ள வருண் தவான், “செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் குழுவிற்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம்” என்று வருண் தவான் பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தாவும் இந்த படங்களை வெளியிட்டு 'மேடம் பிரசிடெண்ட்' என்று எழுதியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.