ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்திய வெர்சனில் சமந்தாவும், வருண் தவானும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு செர்பிய நாட்டில் நடந்து வருகிறது. தற்போது செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்த படங்களை வெளியிட்டுள்ள வருண் தவான், “செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் குழுவிற்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம்” என்று வருண் தவான் பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தாவும் இந்த படங்களை வெளியிட்டு 'மேடம் பிரசிடெண்ட்' என்று எழுதியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.