கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

காக்கா முட்டை, வட சென்னை, கனா உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு இந்த ஆண்டில் அவரது நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, தீரா காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மலேசியாவில் உள்ள மேகலா என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள விதவிதமான இயற்கை காட்சிகளையும் உணவுகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடன் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.