விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்த நிலையில், தமிழக பா.ஜ.,வின் தலைவரான அண்ணாமலை இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.
இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை இசைஞானி அவர்களது இசை இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் மெய்ப்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மொழி இனப் பாகுபாடு இன்றி மக்களின் எல்லாவித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசை கடவுள் எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள் நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.