நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம்தான் முதலிடத்தில் உள்ளது. அப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். அந்தப் படத்தின் வசூல் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
கடந்த வருடம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் 500 கோடிக்கும் கூடுதலான வசூலுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து கடந்த மாதம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் பாகத்தின் வசூலையே முறியடிக்க முடியாமல் இரண்டாம் பாகத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சில பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த வசூலை வேறு எந்தப் படமும் முறியடிக்கக் கூடாது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் பேராசையாக இருக்கும். கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் தமிழக வசூலில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்த் அவர் நடித்து அடுத்தடுத்து வெளிவரும் படங்களின் மூலம் முறியடிப்பார் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு '2.0' படத்தின் வசூல் முறியடிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.
அதை ரஜினிகாந்த்தே அவருடைய அடுத்தடுத்த படங்களில் முறியடிப்பாரா, அல்லது '2.0' படத்தை இயக்கிய ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும 'இந்தியன் 2' படம் முறியடிக்குமா, அல்லது வேறு படங்கள் முறியடிக்குமா என்பதற்கு சற்றே பொறுமை காக்க வேண்டும்.