Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுயசரிதை எழுதும் ரஜினி : மகள் தகவல்

30 ஜன, 2026 - 03:20 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-writing-autobiography-Daughters-information
Advertisement

ரஜினியின் வரலாற்றை பலர் தனித்தனி புத்தகங்களாக எழுதியுள்ளனர். இது போன்ற புத்தகங்களை அவரவர் தங்கள் பார்வையில் எழுதியுள்ளனர் என்றும், அவற்றில் சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மை இல்லை என்றும் ரஜினி பல நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் தன் சுயசரிதயை எழுத பலமுறை முயன்றார். குறிப்பாக எழுத்தாளர் ராமகிருஷ்ணனை வைத்து தனது சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அதனைப் பாதியில் நிறுத்திவிட்ட ரஜினி பல உண்மைகளை சொல்ல வேண்டிய வரும், அது பலர் மனதை பாதிக்கும் என்பதால் சுயசரிதையை தொடர விரும்பவில்லை, என்று கூறிவிட்டார். இந்த நிலையில் ரஜினி, தன் சுயசரிதயை எழுதி வருவதாக அவரது மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறிருப்பதாவது: அப்பாவை எவ்வளவு கொண்டாடினாலும் போதாது. 'ஒரே சந்திரன், ஒரே சூரியன்' மாதிரி ஒரே சூப்பர் ஸ்டார்னா அப்பா மட்டும்தான். அப்பா சாதிச்சது மாதிரி, அவருடைய இடத்துக்கு வேற யாராலயும் வர முடியாது. இது நூறு சதவிகிதம் உண்மையும்கூட.

அவரோட 50 வருஷம் என்பது சாதாரணமான சாதனை இல்லை. அவருடைய மகளாக நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அப்பாவுக்குப் பெரிய விழா எடுத்துக் கொண்டாடணும்னு ஆசை. ஆனா, எங்கே இருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

50வது வருஷத்துக்கு 'படையப்பா'வை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு அப்பா நினைச்சிருந்தார். 25 வருஷமாகத் திரும்பவும் திரைக்கே வராத ஒரு படம்ங்கறதால அப்பா விரும்பினார். 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக ரீ-ரிலீஸ் செய்தோம். ஆனால், அதை ஒரு விழாவாக ஏன் கொண்டாடவில்லை என்றால் அதை எங்கே தொடங்குவது என்று எங்களுக்கு புரியவில்லை.

இன்னொரு விஷயம், அப்பா இப்போது அவரோட சுய சரிதை நூல் எழுதும் வேலைகளை ஆரம்பித்து விட்டார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக குளோபல் சென்சேஷன் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச பட விழாவுக்கு செம்மலர் அன்னமின் படம் தேர்வுசர்வதேச பட விழாவுக்கு செம்மலர் ... வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் : நகுல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap