தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் |
முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் ஆர்யா கூறுகையில், ‛‛இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம். இப்படத்தில் இடம்பெறும் வசனம் 'அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு'. நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், இதுபோன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கின்றேன். வசனத்துக்காக அல்லாமல் படத்திலும் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகளும் இருக்கும்.
என் நீண்ட நாள் ஆசை கிராமத்து ஆக்ஷன் கதைகள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். இயக்குனர் முத்தையாவிடம் நான் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது " என இவ்வாறு தெரிவித்தார்.