நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்முட்டிக்கு இணையாக பரபரப்பாக நடித்து வந்த இவர் அரசியலில் களம் இறங்கியதால், சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் முன்பு போல பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கருடன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி.
இந்த நிலையில் சுரேஷ் கோபிக்கு உடல் நலக்குறைவு என்பது போல சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. இந்த செய்தி சுரேஷ் கோபியின் பார்வைக்கு வந்ததும் உடனடியாக இதுகுறித்த உண்மையை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, “நான் நலமாக இருக்கிறேன். கடவுளின் அருளால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது ஆலுவாவில் உள்ள யு.சி கல்லூரியில் நடந்துவரும் கருடன் பட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். இந்த செய்தி வந்ததும் இதுகுறித்து அக்கறையுடன் என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.